கோவை சிங்காநல்லூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் இருகூர் காந்திசிலை எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இதனை பராமரிக்கும் பணியை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் ஏஜென்சி கவனித்து வருகிறது.
இந்நிலையில், ஏ.டி.எம் எந்திரத்தை பார்வையிட ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் நேற்று சென்றனர். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தின் முன்பக்கம் பாதி உடைக்கப்பட்டிருந்தது.
ஆனால் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முடியாததால், கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றுள்ளார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அதிர்ச்சியடைந்த ஏஜென்சி ஊழியர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்-மில் எவ்வளவு பணம் இருந்தது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.