கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம், சிப்ஸ் கம்பெனி அருகில் சுமார் 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்து விழுந்து உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சென்று பார்த்த போது ஹைவேக்கு சொந்தமான சுமார் 150 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சுமார் 1 வயது பெண் புள்ளி மான் உள்ளே விழுந்தது கிடந்தது உறுதி செய்தனர்.
பின்னர் மதுக்கரை வன அலுவலர் தலைமையில் கரடிமடை பிரிவு வனப் பணியளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நீண்ட போராட்டத்திற்கு பின் கிணற்றில் விழுந்த புள்ளி மானை நல்ல நிலையில் மீட்கப்பட்டனர். பின்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மானானது கரடிமடை வன பகுதியில் உள்ள காப்பு கட்டில் விடுவிக்கப்பட்டது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.