கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஜி திருமண மண்டபத்தில் இன்டர்நேஷனல் சின்டோக்கான் கராத்தே மற்றும் தமிழ்நாடு கராத்தே விளையாட்டு மேம்பாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் ஆர்கனைசிங் கமிட்டி சேர்மன் பஞ்சலிங்கம் சிறப்பு அழைப்பாளர்களையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் மற்றும் அனைவரையும் அன்போடு வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து சின்டோகான் கராத்தே பெடரேஷனின் துணைச் சேர்மன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநிலத் துணைத் தலைவர் திரு.நித்தியானந்தம் மற்றும் பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் டாக்டர்.ஷியாமளா நவநீதகிருஷ்ணன் Ph.D.,STAR PROMOTERS நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி.வெங்கட் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி, சிறப்புரையாற்றி, போட்டியை துவக்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் STAR PROMOTERS திரு. சந்திரமோகன், முதன்மை எக்ஸாமினர் சோஷிகான் மயில்சாமி, ஆர்கனைசிங் கமிட்டி தலைவர் முத்தையா சென்சாய், சின்டோகன் கராத்தே பெடரேஷன் நிர்வாக அலுவலர் ஸ்ரீ சுதாகர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
போட்டிகள் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வயது மற்றும் எடை அடிப்படையில் மாணவர்கள் வகைப்படுத்தி போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் கோவை, ஊட்டி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர் போட்டிகளில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
இறுதியில் வெற்றி பெற்ற நான்கு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பாக முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.