கோவை கலால் மண்டலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் அடங்கியுள்ளது. இதில் 933 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. இவற்றில் கடந்த ஆண்டில் 78 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. கோவை வடக்கு மாவட்டத்தில் 10 டாஸ்மாக் கடைகள், தெற்கு மாவட்டத்தில் 10 கடைகள், திருப்பூர் மாவட்டத்தில் 24 கடைகள், ஈரோட்டில் 24 கடைகள், நீலகிரியில் 3 கடைகள், கரூர் மாவட்டத்தில் 7 கடைகள் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் அதிகளவு மூடப்பட்டது. குறிப்பாக காந்திபுரம் பகுதியில் மட்டும் அதிகளவு டாஸ்மாக் கடைகள் இயங்கியது. இதில் சில கடைகள் மூடப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு காட்டிய இடங்களில் செயல்பட்ட கடைகள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. புறநகர், கிராமங்களில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்படவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மண்டல அளவில் 78 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், அந்த பகுதியில் சிலர் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதிகாலை நேரத்தில் மது பிரியர்களுக்கு மதுபானங்களை பதுக்கி சிலர் தினமும் விற்பதாக தெரிகிறது. கள்ளத்தனமாக விற்கப்படும் மதுபாட்டில்களை வாங்குகிறார்களா, எங்கேயிருந்து பாட்டில் கொண்டு வந்து விற்கிறார்கள் என கண்காணிக்க உள்ளூர் போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கலால் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.