தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டையாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுவையில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளிவர வாய்ப்பு இல்லை 2026ல் நாம் தமிழர் கட்சி நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையா தான் தனி மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார் ஆனால் அதன் காயின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்து விட்டார்.
கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை இருந்தபோதிலும் கொள்ளை புறமாக அதிமுக கூட்டணி வர அண்ணாமலை முயற்சி செய்கிறார் மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துகளை கூறி வருகிறார் இதற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நாணயம் வெளியிடு விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் வருவது இயற்கையான நிகழ்வு தான் இதில் அரசியல் இல்லை எனவும் கூறினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசு ஒன்றிய அவை தலைவர் நாயக்கன்பட்டி சாமி தர்மராஜ் கலை இலக்கியம் பிரிவு போட்டு சாமி கிழக்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்வி வார்டு செயலாளர் சாந்தி உட்பட ஏராளமான கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.