தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை ஒருமையில் அடாவடியாக பேசி வரும் பேசும் நகை மதிப்பீட்டாளர் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் பஜாரில் குறுக்கு சாலை ரோட்டில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஓட்டப்பிடாரம் கிளை செயல்பட்டு வருகிறது .இந்த வங்கிகளில் பொதுமக்கள் விவசாயிகள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிவருந்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் இங்கு வரும் வாடிக்கையாளர்களை ஒருமையில் நீ வா போ என அடாவடியாக பேசி வருகிறார். மேலும் பொது மக்களை அலைக்கழிக்க செய்யும் வகையிலும் ஈடுபட்டு வருகிறார் .மேலும் இவருக்கு உடந்தையாக வங்கி மேலாளரும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
ந.பூங்கோதை