கோவையில் 2 பேரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு!!!

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பசுபதி(19). மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று ராமநாதபுரம் ஆல்வின் நகர் விநாயகர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ. 500 ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து பசுபதி ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அர்ஜூனன்(60). இவர் அதேபகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 300 ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது குனியமுத்தூர் செம்மொழி நகரை சேர்ந்த சிக்கந்தர் பாஷா பர்வேஷ்(21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp