கடந்த சில நாட்களுக்கு முன்பு காலாவதியான குளிர்பானம் அருந்திய 6 வயது சிறுமி உயிர் இழந்ததாக நாம் அனைவரும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்போம். காலாவதியான குளிர்பானங்களை அருந்துவதால் நமது உடலுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இதனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு காலாவதியான குளிர் பானங்களை கண்டுபிடித்து அவற்றை அழித்து வருகின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ் செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்த்து கோவை மாவட்டத்திலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை செய்தனர். அப்பொழுது மாநகர் முழுவதிலுமிருந்து 89. 300 லிட்டர் குளிர்பானங்களை அழித்தனர்.
பொதுமக்களாகிய நாமும் விழிப்புடன் இருந்து குளிர் பாலங்கள் வாங்கி அருந்தும் பொழுது அதனுடைய தயாரிப்பு தேதியையும் பயன்பாடு முடியும் தேதியையும் கவனித்து பயன்படுத்த வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.