வேம்பாரில், சட்ட விரோதமாக AIR COMPRESSOR-களை கொண்டு ஆழ்கடலில் கனவா மீன்கள் வேட்டை ; ஆபத்தை உணராமல் செய்யும் வேலைக்கு அதிகாரிகளும் உடந்தையா..? ; மீன்வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூண்டில் மூலம் கனவா மீன்கள் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் வேம்பாரைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் சட்டவிரோதமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏர் கம்ப்ரசர்களை (AIR COMPRESSOR) பயன்படுத்தி சுவாசித்து ஆழ்கடலுக்கு சென்று அதிக அளவில் கனவா மீன்கள் உட்பட கடல் உயிரினங்களை வேட்டையாடி வருவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேம்பாரை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குனர் மற்றும் எம்.பி.கனிமொழி-யிடம் சட்ட விரோதமாக ஆபத்தான முறையில் ஆழ்கடலுக்குச் சென்று மீன் வேட்டை நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதனை தடை செய்யவும் வலியுறுத்தி புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
தென்தமிழகத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தில் மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மற்றும் தூண்டில் மூலம் மீன்களைப் பிடித்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் சில கனவா மீன்களை மட்டுமே தூண்டில் மூலம் பிடித்து தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தூத்துக்குடி மற்றும் மேம்பாலை சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்களது படகில் சட்ட விரோதமாக ஏர்-கம்ப்ரசர்களை(AIR COMPRESSOR) பொருத்திக்கொண்டு ஆழ்கடலுக்குச் சென்று அதன் மூலம் (நைட்ரஜன் வாயுவை) சுவாசித்து மிகவும் ஆபத்தான முறையில் கனவா மீன்கள் உட்பட பல்வேறு கடல் உயிரினங்களை அதிக அளவில் வேட்டையாடி வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளார். வழக்கமாக இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தூண்டில் மூலம் குறைவான அளவு கனவா மீன்களை பிடித்து தொழில் செய்து வந்த நிலையில் இவ்வாறு AIR COMPRESSOR-களைக் கொண்டு சுவாசித்து ஆழ்கடலுக்கு சென்று மிக அதிக அளவிலான கனவா மீன்களை பிடித்து வருவதால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு இப்பகுதியில் கனவா மீன்களின் இனப்பெருக்கமும் பாதிப்படும் சூழ்நிலை உண்டாகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி, சட்ட விரோதமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இவ்வாறு ஏர் கம்ப்ரசர்கள்(AIR COMPRESSOR) மூலம் சுவாசித்து ஆழ்கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் பல்வேறு கடல் உயிரினங்களையும், பவளப்பாறைகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் கூறுகிறப்படுகிறது. இதனால் மீனவர்களுக்கிடையே சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன்பாக உடனடியாக சட்டவிரதமாக ஆழ்கடலுக்குச் சென்று கனவா மீன்களை வேட்டையாடும் இந்த கும்பலின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மிகவும் உயிருக்கு ஆபத்தான முறையில் AIR COMPRESSOR-மூலம் சுவாசித்து ஆழ்கடலுக்குச் செல்லும் முறையை தடை செய்து உத்தரவு பிறப்பித்து இந்தப் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேம்பாடு மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை இணை இயக்குனர் மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தொடர்ந்து சட்ட விரோதமாக ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் கும்பல் அனைத்து கனவா மீன்களையும் வேட்டையாடிச் சென்று விடுவதால்… கடலுக்கு செல்லும் இப்பகுதியை சேர்ந்த கனவா மீன்பிடி தொழிலாளர்கள் ஏமாற்றத்துடனே வீடு திரும்புவதாகவும், இதனால் சில நாட்களாக கடலுக்குச் செல்லவே இல்லை என்று கூறியதோடு… வருமானம் இல்லை என்பதால் அரசு சார்பில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது, ஆனால் குழம்பு வைக்க காய்கறி வாங்க கூட வழியில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். அத்தோடு, சட்டவிரோதமாக ஏர் கம்ப்ரஸர்களை கொண்டு சுவாசித்து ஆள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் நபர்கள் மீது இன்னும் 2 நாட்களில் அரசு நடவடிக்கை எடுக்க தாமதிக்கும்பட்சத்தில், கடலுக்குள் இறங்கி போராட்டம், சாலை மறியல், ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை மேற்கொள்ள விருப்பதாகவும் மீனவர்கள் அரசுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
(குறிப்பாக… தென்தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தான் இது போன்று சட்ட விரோதமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் ஏர்-கம்ப்ரசர்கள் மூலம் சுவாசித்து ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் செயல் அரங்கேறி வருவதாகவும், இதனால் கடலிலேயே பல உயிரிழப்புகள் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிவது இல்லையா? அல்லது தெரிந்தும் கண்டு கொள்வதில்லையா? போன்ற கேள்விகள் எழுகின்றன….)
ஆகையால், உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடும் மீனவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, மீன்வளத்துறை சார்பில் இதனை தடை செய்து உத்தரவும் பிறக்க வேண்டும் என்பது இப்பகுதி மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.