கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி தலைவர் தலைமையில் துணை தலைவர் முன்னிலையில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
நகராட்சி வளர்ச்சி பணிகளை அரசியல் கட்சிகள் தலையீடு இருப்பதால் மூன்று நகர மன்ற கூட்டத்தில் போடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நகர மன்ற உறுப்பினரான எங்களால் மக்கள் வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியவில்லை என்று கோஷத்தை எழுப்பினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக இப்பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் உண்மையாலுமே நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் மழை என்று பார்க்காமல் மக்கள் வளர்ச்சி பணிக்காக பாடுபடுவதற்கு தயாராக இருக்கின்றனர் ஆனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தலையீடு உள்ளது என்று கூறுகிறார்கள் ஏதாவது ஒரு நகர மன்ற உறுப்பினராவது இந்த அரசியல் கட்சி சேர்ந்த தலைவரின் தலையீடு உள்ளது என்று கூறலாம் அதிலும் இன்னும் சொல்லப்போனால் உண்மையிலே 20 வார்டுகளில் ஆளும் கட்சியான தி மு க வின் நகர மன்ற உறுப்பினர்கள் அப்படி இருக்கும் பொழுது ஆளும் கட்சி தவிர வால்பாறை நகராட்சியில் எதிர்க்கட்சியான அ தி மு க வின் தலையீடு உள்ளதா என்று யோசிக்க வேண்டி நிலை உள்ளது ஏனென்றால் தி மு க வின் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த வார்டும் கிடையாது இதுவரை வால்பாறை பகுதியிலே போடப்பட்டுள்ள சிமெண்ட் மட்டும் தார் சாலைகள் தரமற்றதாகவும் உள்ளது பெயர் அளவுக்கு மட்டுமே வேலைகள் நடைபெறுகிறது அப்பொழுதெல்லாம் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தரமான பாதுகாப்பான சாலைகளோ கட்டிடங்களோ ஏற்படுத்துகிறார்களா என்று பார்க்கலாம் விட்டுவிட்டு இன்னும் பல எஸ்டேட்டுகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாகவும் உள்ளது வால்பாறையில் கார் பார்க்கிங் வசதி கிடையாது நகராட்சி மூலம் பல வருடங்களாக கல்யாண மண்டபம் திறக்காமல் உள்ளது இதுபோல் இப்பகுதி பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் பல தேவைகள் இருக்கும் பொழுது இவர்கள் டெண்டர் விடுவதில் அரசியல் கட்சிகள் தலையீடு இருப்பதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டிருப்பது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது என தெரிவித்தார்.
-P.பரமசிவம் வால்பாறை.