தூத்துக்குடியில் வருகிற 24ஆம் தேதி (சனிக்கிழமை) வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினா் கூட்டம் நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளா், அமைச்சர் பி. கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி. மு. க பொது உறுப்பினா் கூட்டம் வருகிற 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 10. 00 மணிக்கு தூத்துக்குடி கலைஞா் அரங்கத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா்கழகச் செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், கழக செயல் வீரா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
கழக தலைவா் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் 16.08.2024 அன்று நடைபெற்ற மாவட்ட கழகச் செயலாளா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.