கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் அருகே அமைந்திருக்க கூடிய தேவிகுளம் துவக்கப்பள்ளி அருகே கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. மீண்டும் தொடர்ந்து இடிந்து கொண்டே வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அச்சத்துடன் இருந்து வருவதாக கூறுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அப்பகுதியில் மண் சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று தற்காலிகமாக குடிபெயர்ந்து உள்ளனர்.
உடனடியாக அரசு பார்வையிட்டு பெரிய ஆபத்துக்கள் வராத அளவிற்கு தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.