“அதிசயமாக இருந்தாலும் உண்மை: தேசிய கொடியின் முடிச்சு இறுக்கமான நிலையில் இருந்த வேளையில் தேசப்பற்று கொண்ட காகத்தின் உதவி” தேச பற்றுள்ள காகம் என.. இந்த வீடியோவை நேற்றிலிருந்து பல மொழிகளில் பல மாநிலங்களில் காகத்தை விட வேகமாக பரப்புகிறார்கள்…
உண்மை என்ன.?
சுதந்திரதினதன்று கேரளாவில் எடுத்த வீடியோ…
இந்த வீடியோ எடுத்த கோணத்தில்,
தேசியக்கொடி ஏற்றிய போது உச்சியில் சிக்கிக்கொண்ட நிலையில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று சிக்கலை விடுவித்து கொடியை பறக்க செய்தது போல காட்சி அமைந்துள்ளது.
ஆனால், தேசிய கொடி ஏற்றும் வேளையில் எதார்ச்சையாக பறந்து வந்த காகம், கொடி கம்பத்தின் முன்னுள்ள தென்னைமர ஓலையில் அமர்கிறது. பின்னர் கொடியேற்றிய பிறகு கொடி அசைவை கண்டு பயந்து பறந்து சென்றுள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது வேறு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
-MMH.