கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை சுற்றுலாத்தலமான வால்பாறையில் 56 எஸ்டேட்டுகள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க வால்பாறை நகரம் எப்பொழுதும் மக்கள் கூட்டமாக காணப்படும். வாகன ஓட்டிகளும், பெண்கள், முதியவர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் தினந்தோறும் இந்த சாலையை பயணித்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் அங்கு உள்ள சாலையில், வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அதிக அளவில் உள்ளன. இந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் மாடு எங்கு செல்கிறது என்பதை கவனிக்காமல் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த மாடுகள் சாலையில் இருக்கும் உணவுகளை உண்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக தினந்தோறும் அந்த பகுதியில் நடந்து வருகிறது.
மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட இந்த கால்நடை உரிமையாளர்கள் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறாக இல்லாமல் மாடுகளை வளர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். கால்நடை உரிமையாளர்கள் இதனை கண்காணிக்க வில்லை என்றால் சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.