ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள நான்கு ரேஷன் கடைகளில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் சரியான அளவில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து ரேஷன் கடையில் சீனி பருப்பு எண்ணெய் அரிசி உள்ளிட்ட பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்களிடம் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பொருள்கள் வருகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் எண்ணெய் பருப்பு பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் குறைவான அளவில் வருவதாகவும் அதை நிவர்த்தி செய்து தர எம்.எல்.ஏ இடம் தெரிவித்தனர். இதை அடுத்து எம்எல்ஏ சண்முகையா வரும் மாதங்களில் ரேஷன் கடைகளுக்கு சீரான பொருள்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.