கோவை ராமநாதபுரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் கொலம்பஸ் பஸ் நிலையம் அருகில் அதிக எண்ணிக்கையிலான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்த தெரு நாய்களால் அப்பகுதி சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், இந்த நாய்களால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யுமாறு மாநகராட்சி ஊழியர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் நேற்று (செப்.,14) கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளை
ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.