மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல அனுமதி இல்லை!!!

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,இன்றும் (செப்.,14) நாளையும் (செப்.,15) இரு நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு காரில் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பக்தர்கள் மோட்டார் சைக்கிள் மூலமாகவோ அல்லது மலைப்படிகள் வழியாகவோ கோயிலுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த பேருந்துகளைப் பயன்படுத்தி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தற்காலிக ஏற்பாடுகள் குறிப்பிட்ட இரு நாட்களுக்கு மட்டுமே என்பதும், அதன் பிறகு வழக்கம் போல் கார்களில் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts