வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா கால்பந்து மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இம்முகாமினை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் மதிப்பிற்குரிய விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. G.V. மார்க்கண்டேயன் துவக்கி வைத்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து‌ விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.)
பா. கிளாட்வின் இஸ்ரேல் அவர்கள் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு விவசாயிகள் இத்தகைய இலவச சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்புகள் சிறப்புத் தள்ளுபடியில் தனியார் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில் வேளாண்மைப்‌ பொறியியல் துறையினைச் சேர்ந்த உதவி செயற் பொறியாளர்கள் சங்கரநாராயணன், முருகன், செவ்வேள் மற்றும் உதவிப் பொறியாளர்கள், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்), வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp