கோவை மக்களே உஷார்!! இந்த 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் வழங்கும் மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் ஜவுளி, வணிகம், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மையமாக விளங்கி வருவதால் நாள்தோறும் இங்கு அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு பில்லூர், அத்திக்கடவு, சிறுவாணி உள்ளிட்ட அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது இந்த நிலையில் கோவை மாநகராட்சி இன்னொரு மூன்றாம் திட்டத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அக்டோபர் ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுதப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பவானி ஆற்றின் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் மருதூர் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள் கட்டமைப்புகளுக்கான மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு பில்லூர், அத்திக்கடவு, சிறுவாணி உள்ளிட்ட அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது இந்த நிலையில் கோவை மாநகராட்சி இன்னொரு மூன்றாம் திட்டத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அக்டோபர் ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுதப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 8ஆம் தேதி மின்விநியோகம் தடைபட உள்ள நிலையில் அக்டோபர் எட்டாம் தேதி காலை 6 மணி முதல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். மேலும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று மூன்றாம் திட்டத்தில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 9 ,10 தேதிகளை குடிநீர் வினியோகம் தடைபடும்.

குறிப்பாக பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் பெறும் இடங்களான வெள்ளக்கிணறு துடியலூர் காளப்பட்டி சின்னவேடம்பட்டி கவுண்டம்பாளையம் விளாங்குறிச்சி வடவள்ளி குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp