கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதிக்கு நேற்று காலை கோவையில் இருந்து ஐந்து மாணவர்கள் மூணாறு செல்வதற்காக திட்டமிட்டு அதன்படி காரில் உடுமலை வழியாக சென்றுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மறையூர் மற்றும் மூணாறுக்கு இடையிலான நைமக்காடு என்ற பகுதியில் வளைவில் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த டிராக்டர் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த அனைவருக்கும் காயம் அடைந்தனர். உடனடியாக மூணாறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் ஆனாலும் சிகிச்சை பலனின்றி வாகனத்தை ஓட்டி வந்த நந்தகுமார் என்ற மாணவர் மரணம் அடைந்தார்.
இவர்கள் அனைவரும் கோவை காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். விபத்து குறித்து மூணாறு காவல்துறை புகார் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.