மின்சாரம் தாக்கி 2 பெண் யானைகள் பலி! – ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் பரபரப்பு!!!

ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மான், வரையாடு, சிங்கவால் குரங்கு மற்றும் யானை உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. ஆனைமலை காப்பத்திற்கு உட்பட்ட பகுதியாக கோட்டூர் பிரிவு, பருத்தியூர், உமாண்டி மலை வனப்பகுதியில் வனத்துறையினர் தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது இரண்டு பெண் காட்டு யானைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் மேட்டுப்பகுதியில் இரண்டு இறங்கும் பகுதியில் இரண்டு பெண் யானைகளும் இறந்து கிடந்தது.

காட்டு யானைகள் மேட்டு பகுதியில் இருந்து தாழ்வான நிலத்தடி பகுதியை கடந்து வரும் வழியில் மின்சார கம்பிகள் போடப்பட்டிருந்த நிலையில் அதில் சிக்கிய யானைகள் உயிரிழந்ததாக தெரியவந்தது இது குறித்து வனசரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தேஜா, பொள்ளாச்சி வனசரக அலுவலர் ஞானபால முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் யானைகளுக்கு உடற்கூராய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த நிலையில் டாக்டர் விஜயராகவன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் இரவு நேரம் என்பதால் உடற்கூராய்வு மேற்கொள்ள முடியவில்லை அதனால் அடுத்த நாள் காலை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் யானைகளுக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரவு நேரத்தில் தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp