அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுதும் உள்ள அதிமுகவினர் தொண்டர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ஒரு பகுதியாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் காய்கறி மார்க்கெட்டில் அமைந்துள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கும் விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள தொண்டர்கள் சூழ்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே பெருமாள், ஒன்றிய செயலாளர் மகேஷ் பால்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் செண்பகம் பெருமாள் கண்ணன், விளாத்திகுளம் அதிமுக தொழில்நுட்ப பிரிவு சுரேஷ்குமார், ஆனந்தகுமார், சண்முகவேல் மற்றும் அதிமுக வார்டு மெம்பர் பிரியா,மகளிரணி சாந்தி குமாரத்தாய் மற்றும் பல தொண்டர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
One Response
நிர்வாகிகளின் முழு விவரம் கேட்டு பதுவிடுதல் நலம் மாவட்ட நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகளை தவிர்த்தல் அறம் இல்லை