கோவை புறநகர் பகுதியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் முக்கியமாக கல்லூரி மாணவர்களிடம் இது தொடர்பான போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களை குறி வைத்து போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் மாணவர்கள் அனைவரும் தங்கி இருக்கும் வீடுகள், மற்றும் அங்கிருந்த அறைகளை சிறப்பு காவல் துறையினர் சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக சோதனை செய்ய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயேன் உத்தரவிட்டார்.
அதன் பெயரில் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனைகள் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த மூன்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளியூர் மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு காவல் துறையினர் சென்று ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர்.
இதில் சில மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் கஞ்சா பொட்டலம் போட்டுக் கொடுப்பதற்காக சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து காவல் துறை நடத்திய சோதனையில் மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அவற்றை மாணவர்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த 6 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு போதைப் பொருட்களை சப்பளை செய்த நபரையும் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.