தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுறு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மூன்றாம் கட்ட போராட்டமாக வருவாய்த்துறை பணியிடங்களை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தூத்துக்குடி விளாத்திகுளத்தில்
தாலூகா வருவாய்த்துறை அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 400-க்கும் அதிகமானவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடியது. பல தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால் வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.