பொள்ளாச்சி :
பொள்ளாச்சி நகராட்சி 26 வது வார்டு பகுதிக்குட்பட்ட நகரின் பிரதான மையப் பகுதியான நகர காவல் நிலையம் முன்பு எஸ். எஸ் கோவில் வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை செல்லக்கூடிய சிறு பாலம் கடந்த 15 ஆண்டுகளாக சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் அடிக்கடி மழை காலங்களில் மிகப்பெரிய சிரமத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பாலத்திற்கு தீர்வு வேண்டி 26 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம் அவர்களின் கோரிக்கையை ஏற்று நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் அவர்களின் பரிந்துரையின் பேரில் நகராட்சி நிர்வாகம் ரூபாய் 4.40 லட்சம் செலவில் பாலம் கட்ட
உத்தரவு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் எம். கே சாந்தலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் கிளைச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கிட்டுத்தம்புரான், சிவக்குமார், மகாலிங்கம் உள்ளிட்ட அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்களென திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V.ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.