ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை!!

புளியம்பட்டி அந்தோணியார் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லையிலிருந்து புளியம்பட்டி ஓட்டப்பிடாரம் வழியாக சென்னைக்கு புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா வலியுறுத்தினார்.

நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோனியார் திருக்கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லும் வகையில் நெல்லையிலிருந்து சீவலப்பேரி புளியம்பட்டி ஓட்டப்பிடாரம் வழியாக சென்னை வரை புதிய அரசு பேருந்து வசதியே அரசு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்.

இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசினார். மேலும் பஸ் சேவை குறித்த கோரிக்கையை தனியாக தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp