தமிழக சுற்றுலாத்துறை செயலாளருக்கு வால்பாறை தமிழக வணிகர் சம்மேளனம் கடிதம் தமிழக வணிக சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் பி பரமசிவம் அனுப்பி உள்ள கடிதத்தில
மதிப்பிற்குரிய சுற்றுலாத்துறை செயலாளர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக பணிவான வணக்கம் கோவை மாவட்டம் வால்பாறை இயற்கை நிறைந்த பல்வேறு கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப உலகிலேயே தலைசிறந்த இடமாக உள்ளது. இங்கு பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வேதனை அடைகிறார்கள். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகையை விட குறைவாக உள்ளதால் வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை நம்பியிருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலம் வால்பாறையை சுற்றுலாத்தலமாக அறிவித்து அதற்கான நிதிகளை ஒதுக்கி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 40 கிலோமீட்டர் உள்ள வால்பாறை அருகே ரயான் எஸ்டேட்டில் இருந்து மூணாருக்கு ஒருவழிப்பாதையாகவும் இருந்தது. அதை அப்போது இருந்தவர்கள் பயன்படுத்தினார்கள். தற்பொழுது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை பயன்படுத்த முடியவில்லை. வால்பாறையிலிருந்து மூணாருக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் எட்டு மணிநேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை கருத்தில் கொண்டும், மூணாரிலிருந்து வால்பாறைக்கு எளிதாக சுற்றுலாப்பயணிகள் மற்றும் உற்றார் உறவினர்களை பார்க்க வருவதற்கு வசதியாக இருக்க வால்பாறை ரயான் எஸ்டேட்டில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தார்சாலை அமைத்தால் இப்பகுதி வளர்ச்சியடையும். சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருவார்கள். வணிகர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். எனவே மாண்புமிகு சுற்றுலாத்துறை செயலாளர் அவர்கள் தமிழக அரசிடம் எடுத்துக் கூறி தார்சாலை அமைத்து சுற்றுலாவை ஊக்குவிக்குமாறு பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-M.சுரேஷ் குமார்.