திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த கடந்த நவம்பர் 18ம்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள யானைப் பாகன் உதயகுமாரின் வீட்டிற்கு நேரில் சென்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், உயிரிழந்த யானைப்பாகன் மனைவிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்ற பணி நியமன ஆணையை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.