புத்தாண்டு கொண்டாட்டம்! கோவையில் 1600 போலீசார் பாதுகாப்பு… முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு!!!

புத்தாண்டு தினத்தையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

புத்தாண்டு தினத்தையொட்டி, கோவை மாநகரில் மக்கள் அதிகம் வருகை தரக்கூடிய 10 இடங்கள், 40 முக்கிய சந்திப்புகள், 84 சர்ச்சுகள் மற்றும் 16 கோவில்கள் ஆகியவை கண்டறியப்பட்டு மேற்படி இடங்களில் போக்குவரத்தை சரிசெய்வதற்கும், பொது அமைதியை பேணுவதற்காகவும் காவல்துறையினரின் எண்ணிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தையொட்டி, கோவை மாநகரில் உள்ள 7 பேருந்து நிலையங்கள், 6 ரயில்வே நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோடு, பாலக்காடு மெயின் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, கவுலி பிரவுன் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தியமங்கலம் ரோடு, RG வீதி, VH ரோடு சாலை, பூ மார்க்கெட் ரோடு, திவான் பகதூர் ரோடு மற்றும் பிற முக்கியமான சாலைகள் ஆகிய இடங்களில் அதிக அளவிலான காவல்துறையினரைக் கொண்டு போக்குவரத்தும் கண்காணியும் பலப்படத்தப்படவுள்ளது.
அவரசகால தேவைக்கென்று நகரின் முக்கிய பகுதிகளான கொடிசிய சந்திப்பு, தாமஸ் பார்க், LIC சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, ஆத்துப்பாலம் சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் 6 அதிவிரைவுப் படைகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

4 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 15 காவல் உதவி ஆணையர்கள், 44 காவல் ஆய்வாளர்கள், 232 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 992 காவலர்கள், 2 அணி தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் ஆளிநர்கள் மற்றும் 150 ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 1600 பேர் புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள், காவல்துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதோடு புத்தாண்டு தின கொண்டாட்டம் குறித்த ஏதேனும் அசம்பாவிதம் அல்லது குற்றச்செயல்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அவற்றை உடனடியாக கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 0422 2300970, மொபைல் எண்: 94981 81213 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 81900 00100 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் ரகசியம் பாதுகாக்கப்படும். பெண்கள் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் மகளிர் அவசர உதவி எண் 1091 யை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் அவசர காலத்தில் தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள ‘காவல் உதவி செயலி’ மூலமாகவும் காவல் துறையில் உதவியை நாடயாம்.

பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு தடையேதும் இல்லை. கோவை மாநகர காவல்துறையும் சட்டம் ஒழுங்கிற்கு பாதகமில்லாத வகையில் பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதை வரவேற்கிறது.

இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாகவும், பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடுவோர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருட்களை உபயோகிப்பது தொடர்பான விசயங்கள் ஆகியவற்றில் கோவை மாநகர காவல்துறையானது எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காது என்பதையும் அத்தகையோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp