பொள்ளாச்சியில் கவிஞர் கோவை ஆனந்தனின் நூல் வெளியிட்டு விழா..!!

பட்டாம்பூச்சி குழும ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் வெளியிட்டு சிறப்புரை.

பொள்ளாச்சி : டிச.31. பொள்ளாச்சி ஏடிஎஸ் தியேட்டர் முன்புறம் உள்ள பர்வானா கலையரங்கில்
கவிஞர் கோவை ஆனந்தன் எழுதிய ரகசியமாய் ஓடும் பந்தயக் குதிரைகள் என்னும் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. சத்யப்பிரியா வரவேற்புரையாற்ற
கவிஞர் .முனைவர் கிருஷ்ணா கணேஷ் தொகுப்பு வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் ரகசியமாய் ஓடும் பந்தயக் குதிரைகள் கவிதை தொகுப்பின் முதல் பிரதியை பட்டாம்பூச்சி குழுமம் மற்றும் பட்டாம்பூச்சி எப்ஃஎம். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் .பொள்ளாச்சி முருகானந்தம் வெளியிட செல்வி அனன்யா மற்றும் கவிஞர்கள் பெற்றுக் கொண்டனர்..

இந்த நிகழ்ச்சியில் தமிழ் இலக்கிய பாசறை பொதுச் செயலாளர் முனைவர் கோவை கிருஷ்ணா .
ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் .நகரமன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம்பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் இரா. பூபாலன் .கோவை வெண்ணிலா மன்ற தலைவர் கவிஞர். கவியகம் மணிவண்ணன் வாகை பதிப்பகம் மற்றும் வாசகர் வட்ட தலைவர் கவிஞர் .துரைசாமி
தீ இனிது இலக்கிய இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் .சோழநிலா
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நூலை தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கவிஞர் டாக்டர் கோவை சசிகுமார் மற்றும் பட்டாம்பூச்சி பண்பலை ஆர் ஜே கவிஞர். ஹிதாயத் ஆகியோர் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே. எம் சண்முகம்.பொள்ளாச்சி தமிழிசைச் சங்க துணைச் செயலாளர் முரளி கிருஷ்ணன்.நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பொள்ளாச்சி அபி.சுடர்விழி சோலைமாயவன்.கவிஞர் செந்திரு.எழுத்தாளர் ஜின்.கவிஞர் முகில் நிலா தமிழ்.கவிஞர். ரஹ்மத்துல்லா .ரகுபதி.உள்ளிட்ட ஏராளமான கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V.ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp