பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கோரிக்கை மனு!

கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது குறித்து பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) சார்பில் செயலாளர் P. பரமசிவம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

மனுவில் மதிப்பிற்குரிய பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக பணிவான வணக்கம்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மூன்று நான்கு தலைமுறைகளாக தனது எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வால்பாறைக்கு தேயிலை தொழிலுக்காக வந்தனர். அப்பொழுது அவர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வாய்மொழியாக பெயர், தகப்பனர் பெயர், பிறந்த தேதி போன்றவை பதிவு செய்து நிர்வாகம் வேலை வழங்கப்பட்டது.

ஆதார் அட்டை அறிமுகப்படுத்தும்போதும் இதே நிலையை பின்பற்றினார்கள் தற்பொழுது வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் எஸ்டேட் நிர்வாகத்தில் உள்ளது போல் ஆதார் அட்டையிலும், பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி ஆகியவை இருந்தால் மட்டுமே பணப்பலன்களை வழங்கப்படுகிறது.

இதனால் பல வருடங்களாக தேயிலைத்தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி பணப்பலன்களை பெற முடியாமலும், ஒருசிலர் தேயிலைச் செடிக்கே உரமாகிறார்கள்.

இது தொடர்பாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கும். பி.எப். அலுவலகத்திற்கும் பல வருடங்களாக சுமார் 110 கிலோமீட்டர் பயணம் செய்து நேரமும், பண விரையமும் ஏற்படுகிறது. இதிலும் இடைத்தரகர்களின் ஆதிக்கமும் அதிகம். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு வால்பாறையிலேயே பி.எப். கிளை அலுவலகம் திறப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் சார்பாகவும், எங்கள் அமைப்பின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp