மூணாறு வாகுவாரை ஃபேக்டரி டிவிஷன் அருகே வசித்து வரும் மோகன்,வசந்தா இவர்களின் வீட்டில் இன்று காலை 11:30 மணி அளவில் மின் கசிவு ஏற்பட்டது. வீட்டில் வசிப்பவர்கள் வேலைக்கு சென்ற பொழுது தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வீட்டிலிருந்த பலவித பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தது. லைன் வீடுகளாக இருந்தாலும் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மூணாறு பகுதியில் லைன் வீடுகளில் இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் கம்பெனி நிர்வாகங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டுக்கொள்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா மூணாறு,கேரளா