கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள கக்கன் காலனி நாகாத்தம்மன் கோவில் அருகாமையில் லோகநாயகி கிருஷ்ணசாமி அவர்கள் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராமல் தீ பரவியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பொழுது சமையல் அறைக்குள் பரவிய தீ மள மள வென்று வீட்டின் கூரையின் மேலே பரவியது. அக்கம் பக்கத்தினர் புகை மூட்டத்தை கண்டு தீயணைப்பு அதிகாரிகளை வரவழைத்தனர். வாகனங்கள் செல்ல வழியின்றி தீயணைப்புத் துறையினர் வர முடியாமல் தவித்தனர்.
பின்பு அப் பகுதியிலுள்ள பொதுமக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்பு தீயணைப்பு அதிகாரிகளுடன் அப்பகுதி மக்களும் எரிவாயு சிலிண்டரை அணைத்து வெளியே கொண்டு வந்து சிலிண்டரை குளிர வைத்தனர். வீடு முழுவதும் சேதம் அடைந்து. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னே அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்ததால் மிகுந்த பாதிப்பை தவிர்த்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.