மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்துசென்ற காளைகள் – சாலையின் இரு புறங்களிலும் இருந்து ரசித்த மக்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில், ஓட்டப்பிடாரம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோகன் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்றது.

இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நடுமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன. வெற்றியின் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள், சாரதி மற்றும் பின்சாரதிகளை சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்த பொதுமக்களும், மாட்டு வண்டி பந்தய ரசிகர்களும் ஆரவாரமிட்டு உற்சாகப்படுத்தினர். முடிவில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சின்ன மாடு போட்டு வண்டியில் முதலிடத்தை தொட்டம்பட்டி பேச்சியப்பன் நாயக்கர் மாட்டு வண்டி, இரண்டாவது பரிசினை கல்லூரணி செக்காரக்குடி , அபிநயா வேல்முருகன், மூன்றாவது இடத்தை மீனாட்சிபுரம் முத்து ஈஸ்வரி மாட்டு வண்டியும் மற்றும் நான்காவது இடத்தை சீவலப்பேரி துர்க்காம்பிகை மாட்டு வண்டியும் பிடித்தது.

நடு மாடு மாட்டு வண்டி போட்டியில் சீவலப்பேரி சுப்பையா பாண்டியன் மாட்டு வண்டி முதல் இடத்தையும், அவனியாபுரம் மோகன் சாமி மாட்டு வண்டி இரண்டாவது இடத்தையும்‌, மூன்றாவது இடத்தை சண்முகபுரம் விஜயகுமார் மாட்டு வண்டியும். வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தது.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு லக்கம்பட்டி முத்துராமலிங்கம் மாட்டுவண்டியும் , இரண்டாவது பரிசு கச்சேரி தளவாய்புரம் மகிஷா குட்டி மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு செக்காரக்குடி மினிஸ் முத்து மாட்டு வண்டியும் வெற்றி பெற்றன

வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாட்டு உரிமையாளர்களுக்கும் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் சுதா கே. பரமசிவன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர் கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார் மாணவரணி செயலாளர் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts