வாழ்வா..? சாவா..? அழியும் விளிம்பில் வால்பாறை பொதுமக்கள்!!! மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வணிகர் சம்மேளனம் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன் குமார் கிரியாப் பவனர் தலைமையில் வால்பாறையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில்மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டு கள ஆய்வு செய்தனர்.

அப்பொழுது தமிழக வணிகர் சம்மேளனம் சார்பில் ஒரு பதகை கூட்டத்தில் வைரலானது இந்தப் பதவி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது வால்பாறை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வாழ்வா..? சாவா..? அழியும்!!! விளிம்பில் வால்பாறை பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எந்த நேரம் என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆழியாரிலிருந்து வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்துகிறது, ஆழியார் மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள வனத்துறை அலுவலர்கள் வனவிலங்கையும், வனத்தையும், பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் இங்கு அதிக மரங்கள் வெட்டப்படுகிறது.

வனவிலங்கு உயிர் இழப்பு மனிதரும் வனவிலங்கும் மோதல் ஏற்படும்போது அப்பாவி மக்களை வனவிலங்கிலிருந்து பாதுகாப்பது வனத்துறையின் இன்றியமையாத பணி ஆகும். இவர்கள் இதை எல்லாம் மறந்து எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அடித்தட்டு மக்கள் கஷ்டப்படுவது வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆழியார் சோதனைச் சாவடியில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது இந்நிலையில் வால்பாறைக்கு முதல் முறையாக வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே வாழ்த்தி வரவேற்கிறோம் இப்பகுதி மக்களின் அவல நிலையை கண்டு வனவிலங்கு தொல்லையிலிருந்து பாதுகாத்துக் கொடுங்கள் வனவிலங்கு தாக்கினால் மனிதர்கள் உயிர் இப்படி பறிபோகிறது, விஷத்தன்மை உள்ள வனவிலங்குகள் பாம்புகள் இப்பகுதியில் அதிகம் இருக்கிறது மக்கள் இங்கு வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

மக்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் இவர்கள் இவர்களாகவே தூக்கில் தொங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று வரைபடத்தின் மூலம் வரைந்த பதாகை ஆட்சியாளர்களிடம் காண்பித்தார்கள்.

அது மட்டுமல்லாமல் ஆழியார் செக் போஸ்டில் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்துவதையும் கைவிட வேண்டும் என்று கூறினார்கள் அதைத்தொடர்ந்து ஆட்சியாளர் அவர்களுக்கும் பதாகைகள் உள்ள புகைப்படத்தை பார்த்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். அவருக்கு வால்பாறை பொதுமக்கள் சார்பாகவும் தமிழக வணிகர் சம்மேலனத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழக வணிகர் சம்மேலனத்தின் மாநில துணைச் செயலாளர் பரமசிவம், மாநில செயற்குழு தலைவர் சரவணன், வால்பாறை பொருளாளர் சிவா ஆகியோர் பொதுமக்கள் சார்பாகவும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தார் இதை பார்த்த பொதுமக்கள் எளிதாக மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து எடுத்துக் விளக்கி கூறியதை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts