கோவை மாவட்டம் வால்பாறை ஏழை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள்
குறைந்த சம்பளத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வன விலங்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பிழைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கு வால்பாறை நகராட்சியில் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வாரிசில் உள்ளவர்கள் உறுதிமொழி, ஜாதி சான்றிதழ், அனைவருடைய ஆதார் நகல், பணம் பெறுவோர் வங்கிப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் உதவித்தொகை பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் ஆவணங்கள் சரியாக இருந்தாலும்
ஈமச்சடங்கு தொகையை பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுவதாக குற்றச்சாட்டு எழுகிறது.
இதனால் ஏழை தொழிலாளர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏழை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஈமச்சடங்கு தொகையை கால தாமதம் செய்யாமல் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வால்பாறை P.பரமசிவம் வேண்டுகோள் விடுக்கிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.