முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

கோவை: முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கோவையில்  எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீதிமன்ற உத்தரவுப்படி கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் பல ஆண்டுகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி கடிதம் எழுதி முதல்வருக்கு அனுப்பும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.கட்சியனர் துவக்கி கடிதம் அனுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக,கோவையில் நடைபெற்ற  பிரச்சாரத்தில் பெறப்பட்ட கடிதங்களை தமிழக முதல்வருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக நடைபெற்றது. கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர் முகம்மது இசாக்,மாவட்ட பொருளாளர் முகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய கோரி  எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து,ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து தமிழக முதல்வருக்கு  கடிதம் அனுப்பினர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ  மாவட்ட செயலளர் A.j.உசேன் , மாவட்ட நிர்வாகிகள் பிளாஸ்டிக் அப்பாஸ், செய்தி  தொடர்பாளர் மன்சூர், மற்றும் தொகுதி நிர்வாகிகள் சதகத்துல்லா, சிகாபுதீன், சேக்பரீத், மற்றும் அர்சாத், இப்றாஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts