நாளைக்கு கடை லீவு..!! எந்த கடை..?

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப்புகளில் இயங்கும் பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல் 3-ஏ, எப்எல் 3-ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மீறி கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை என்று அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், தவறினால். மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts