ஆனைமலை சுற்றுப்பகுதிகளிசாகுபடியாகும் இளநீர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மும்பை, ஆந்திரா, போன்ற வெளி மாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது ஆனைமலை பகுதிகளில் பண்ணையில் இளநீர் விற்பனை விலை அதிகரித்துள்ளனர்.
மேலும் இதுபற்றி ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் A.E. சீனிவாசன் அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாவது.
தற்பொழுதுஆனைமலையிலிருந்து இளநீர் வெளி மாநில பகுதிகளுக்கு அனுப்புவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . எனவே விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து,
இந்த வாரம் ஏப்ர 25ஆம் தேதி திங்கள்கிழமை இன்று முதல் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் பண்ணை விலை ரூபாய் 31 என நிர்ணயம் செய்தும் .எடைக்கு விற்பனை செய்தால் ஒரு டன் இளநீர் ரூபாய் 11500 என நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனஆனைமலை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.