99 வார்டு ஸ்ரீராம் நகரில் மக்கள் குறை கேட்டறிந்தார் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா..!!

கோவை மாவட்டம் போத்தனூர் 99 வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதி மக்களுக்கிடையே எழுந்த சந்தேகங்களை நேரில் சென்று பதில் கூறி சரி செய்தார் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா.

நேற்று மாலை 7 மணி அளவில் ஶ்ரீ ராம் நகர் குடியிருப்பு ஐந்தாவது வீதியில், மக்களின் குறைகளை
நேரில் சென்று கேட்டரிந்தார்.

இந்த நிகழ்வில் அ. பிரிவு செயலாளர் சம்சுதீன்,ஏஎஸ் சாதிக், மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாமன்ற உறுப்பினர் நேரில் அந்த பகுதியில் குறைகளை கேட்டு அறிந்ததும் மக்களோடு மக்களாக உடனுக்குடன் பணி செய்வதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா,
செய்யது காதர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts