நீண்டநாள் போராட்டத்திற்குபின் சுத்தம் செய்யப்பட்ட பகுதி! செல்வபுரம் கல்லாமேடு பகுதி மக்கள் பாராட்டு!!

செல்வபுரம் கல்லாமேடு, பழைய வெங்கடேஷ்வரா மண்டபம் எதிரில் முள்புதர்கள் நிறைந்த இடமாக காட்சிஅளித்த வீட்டுமனையினால் அந்த பகுதி மக்களை பாம்பு போன்ற விஷஜந்துகள் அச்சுருத்தி வந்த நிலையில் கடந்தஅதிமுக ஆட்சியில் பலமுறை புகார் கொடுத்தும் கண்டு கொள்ள வில்லை.

இப்போது நடைபெறும் தளபதி தலைமையிலான திமுக ஆட்சியில் தற்போது 79 வதுவார்டின் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தாமணி பழனிச்சாமி அவர்களிடம் பொதுமக்கள் புகா் கொடுத்ததின் அடிப்படையில்,

நேற்று கவுன்சிலர்ஏற்பாட்டில் மாநகராட்சிஅதிகாரி ராமு சூப்ரவைசர் பரமசிவம்.கனேஷ். அபு. முஜீப்.மற்றும் நிரவாகிகள் பகுதி பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் அந்த பகுதி முழுவதுமாக
சுத்தம் செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் வெகுவாக மாமன்ற உறுப்பினர் வசந்தாமணி பழனிச்சாமியை பாராட்டினார்கள்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீபுடன் முஜீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts