பொட்டல்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்- கலெக்டரிடம் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தினர் கோரிக்கை..!!

தென்காசி கடையம்: தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர் மற்றும்முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கவுரவ செயலாளர் முகம்மது சலீம், உதவி செயலாளர்கள் டாக்டர் அப்துல் அஜிஸ், பக்கீர் மைதீன், உறுப்பினர்கள் காசீம், அலி சேக் மன்சூர், பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா முத்தவல்லி எஸ்.பி.ஷா ஆகியோர் உடன் இருந்தனர். கலெக்டரிடம், பொட்டல்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்தியாளர்

 -அன்சாரி நெல்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts