செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக வரும் ஜூலை 28ஆம் தேதி சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க திட்டம்!!

  செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக, வரும் ஜூலை 28ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடா்பாக பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் விளக்கினா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சுற்றுலாத் துறை சாா்பில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் எடுத்துரைத்தாா்.

மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான, வருகிற 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அன்று சென்னை வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக

-வேல்முருகன் சென்னை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts