பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் கல்வி நிலையங்கள்!! மாவட்ட நிர்வாகம் தலையிட பெற்றோர்கள் வலியுறுத்தல்!!

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி “indemnity” (பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) என்ற படிவத்தில் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகள் சில கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக கூறப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள GRD பப்ளிக் பள்ளிக் என்னும் சி.பி.எஸ்.சி பள்ளியில் பெற்றோர்களிடம் “indemnity” (பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொருப்பல்ல) என்ற படிவத்தை வழங்கி அதில் கையெழுத்திட கட்டாயப்படுத்த படுவதாக கூறப்படுகின்றது.

இதில் கையெழுத்திடவில்லை என்றால் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை பெற்று செல்லுமாறும் வற்புறுத்துவதாக கூறப்படுகின்றது. இதனால் பெற்றோர் பலர் இந்த படிவத்தில் கையெழுத்திட்டு செல்கின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் பள்ளியில் “indemnity” என்ற படிவம் வாங்குவது உண்மை தான் என்றாலும் பெற்றொரை கட்டாயப்படுத்துவது இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி. ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts