கோவை மாநகராட்சி பள்ளியில் 69 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தேசியக்கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் விதைப்பந்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!

கோவை இராமலிங்கம் காலனியில் உள்ள கோவை மாநகராட்சி பள்ளியில் 69 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் தேசியக்கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் விதைப்பந்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை ஒட்டி கோவை மாநகரம் முழுவதும் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக கோவை இராமலிங்கம் காலனியில் உள்ள கோவை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் 69 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார் தேசியக்கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன் மரக்கன்று நடுவதை ஊக்குவிக்கும் வகையில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்று மற்றும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஆசியர்கள் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். மேலும் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட கணிப்பொறி அறை திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜார்ஜ், அருண்குமார்,தென்றல் நாகராஜ், வக்கீல் சிவக்குமார், பொன் ஆனந்தன், கண்ணன், அக்பர், கோபி, உஷா, சண்முகம், கணேசன், கரிகாலன், துரை சிங்கம், ஆர்.கே.ரவி, வெற்றி, கருப்பசாமி, ராஜ்குமார், முத்துக்குமார், முத்துசாமி, ஜோசப், ஆறு சாமி, ஆறுமுகம், சிவராமன், ஜெயபால், வேலுச்சாமி, தேசபக்தன் துரைசாமி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts