வால்பாறையில் கஞ்சா வைத்திருந்த இளம் பெண் கைது!!

கோவை மாவட்டம் வால்பாறை காமராஐர் நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வால்பாறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறை ஆய்வாளர் திருமதி கற்பகம் அதிரடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று சோதனை செய்தபோது 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த முத்துலட்சுமி என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். பின்பு வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமி கஞ்சா வைத்திருந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts