வால்பாறை பேருந்து நிலையத்தில் நிற்காத பேருந்து பொதுமக்களும் மாணவர்களும் அவதி!!

கோவை மாவட்டம் வால்பாறை அரசு போக்குவரத்து கழக கிளை பனிமலையிலிருந்து கருமலை, பச்சமலை, நடுமலை, அக்காமலை, ஊசிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் நிறுத்தாமல் தள்ளி

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிறுத்துவதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிச்சென்று பேருந்தில் ஏறுவதால் விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் போக்குவரத்துப் பாதையில் பயணிகளை ஏற்றி இறக்குவாதல் வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகள் நிறுத்துவதற்கு இடம் இருந்தும் ஒரு பேருந்து நிற்பதற்கு மட்டும் இடம் ஒதுக்கப்பட்டதால் நாள்தோறும் பொதுமக்களும் மாணவர்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஆகையால் இரண்டு பேருந்துகள் நிற்பதற்கு போக்குவரத்து நிர்வாகம் சரி செய்து தர வேண்டுமென போக்குவரத்து கழகத்துக்கு வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். வால்பாறை பொதுமக்களின் கோரிக்கையை போக்குவரத்து கழகம்
சரி செய்யுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts