கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது சாலையில் மப்சல் பேருந்து அங்கும் இங்கும் அலை மோதி சென்றது இந்நிலையில் மயிலேரிபாளையம் பிரிவு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விபத்தில் சரக்கு வாகனம் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய மப்சல் பேருந்து ஓட்டுனர் பொள்ளாச்சி மணிமொழி ( 47 ) விசாரித்த பொழுது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து போத்தனூர் செட்டிபாளையம் காவல்துறையிடம் அவரை அப்பகுதியினர் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் அவர் மீது மது போதையில் பேருந்தை இயக்கி யதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.