ஆட்டோ டிரைவரை கொன்று புதைத்த மூவருக்கு ஆயுள் தண்டனை!!

திருப்பூர் அனுப்பர்பாளையம் பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன், 41. இவரின் இரண்டாவது மனைவி ஜெயலட்சுமி, 30. முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன், 19. இக்குடும்பத்தினருடன், தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு, 26 இவர் ஜெயலட்சுமியிடம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன் திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்து சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளார். திருவரசுவைக் காணவில்லை என அவர் தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது தொடர்பாக ராக்கப்பன், ஜெயலட்சுமி, மகன் அருண்பாண்டியன் ஆகிய மூவரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார். இதில், மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts