ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணா மலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்து அரோகரா அரோகரா என்று குரல் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிரிவலப்பாதை 14 கிலோமீட்டர் உள்ளது. 14 கிலோமீட்டர் தொலைவிற்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று விடிய விடிய குரலெழுப்பி அவர்களின் கிரிவலப் பாதையை நிறைவு செய்தனர்.
அதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை பௌர்ணமியில் கிரிவலப் பாதையை சுற்றிவந்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
வெளி மாநில மக்களும் வந்து அவர்களின் நேர்த்திக்கடனை செய்தனர். அதாவது கிரிவலப் பாதையை சுற்றி வலம் வருகின்றனர். அனைவரும் ஆனந்தமாய் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதையை நிறைவு செய்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஏ.பழனி, திருவண்ணாமலை.